பசில் ராஜபக்ஸ அடுத்த வாரம் இந்தியா பயணம்

பசில் ராஜபக்ஸ அடுத்த வாரம் இந்தியா பயணம்

by Staff Writer 12-03-2022 | 5:41 PM
Colombo (News 1st) நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ அடுத்த வாரத்தில் இந்தியா  பயணிக்கவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியாவிடமிருந்து பெறப்படவுள்ள ஒரு மில்லியன் டொலர் ஒப்பந்தம் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகல தெரிவித்தார். இயலுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு உதவுவதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில், நிதியமைச்சர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த போதிலும் பல்வேறு காரணங்களால் இரத்து செய்யப்பட்டது. இதனிடையே, கடன் மறுசீரமைப்பு மற்றும் டொலர் பற்றாக்குறையை முகாமைத்துவப்படுத்துவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளதாகவும் நேற்றிரவு வௌியான அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.