பதுளையில் கொல்லப்பட்ட மாணவியின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது

by Staff Writer 11-03-2022 | 10:26 PM
Colombo (News 1st) பதுளை - ஹாலி எல, உடுவரை தோட்டத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, உயிரிழந்த மாணவியின் சடலம் இன்று (11) நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த 08 ஆம் திகதி பாடசாலை சென்று வீடு திரும்பிய 18 வயது மாணவி, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். உயிரிழந்த மாணவியின் சடலம், பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. உயிரிழந்த மாணவியின் சடலத்திற்கு, பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர். ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீருக்கு மத்தியில் மாணவியின் சடலம் உடுவர ஏழாம் கட்டை பொது மயானத்தில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே, மாணவியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். உடுவரை தோட்டத்தை சேர்ந்த 33 வயதான ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாலி எல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.