by Staff Writer 11-03-2022 | 5:12 PM
Colombo (News 1st) கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இன்று மாலை 3.30 அளவில் கொடியேற்றம் இடம்பெற்றது. நாளை (12) காலை 7 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
பின்னர் இரவு 9 மணியுடன் கொடி இறக்கப்பட்டு திருவிழா இனிதே நிறைவுபெறவுள்ளது.
திருவிழாவையொட்டி தமிழகத்தின் மண்டபம் முதல் இராமேஸ்வரம், தனுஷ்கோடி வரையிலான இந்திய கடற்பகுதியில் இந்திய கடலோர காவற்படைக்கு சொந்தமான 3 கப்பல்களும் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஒரு கப்பலும் நேற்று (10) முதல் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன.