by Staff Writer 10-03-2022 | 11:48 AM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்துள்ள மனுவை பரிசீலிப்பதிலிருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட விலகியுள்ளார்.
தாம் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி, ஷானி அபேசேகர குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.