by Staff Writer 10-03-2022 | 10:55 AM
Colombo (News 1st) தமிழ் - சிங்கள புதுவருட பிறப்பிற்காக வௌிநாடுகளிலுள்ள இலங்கை பணியாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் டொலருக்கு விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு நிதி அமைச்சு உத்தேசித்துள்ளது.
அதனடிப்படையில், நாட்டிற்கு அனுப்பப்படும் டொலரொன்றுக்கு மேலதிகமாக 20 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.