by Staff Writer 09-03-2022 | 1:05 PM
Colombo (News 1st) பதுளை - ஹாலிஎல, உடுவரை தோட்டத்தில் மாணவி ஒருவரை வெட்டி கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுவரை தோட்டத்தை சேர்ந்த 33 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவியை வெட்டி கொலை செய்த பின்னர், தலைமறைவாகியிருந்த நிலையில் சந்தேகநபர் இன்று(09) அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
பாடசாலை சென்று வீடு திரும்பிய 18 வயது மாணவி ஒருவர், நேற்று(08) பகல் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
உயிரிழந்த மாணவியின் சடலம் பதுளை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஹாலிஎல - உடுவரை தோட்டத்தை சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவரே இவ்வாறு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹாலிஎல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.