டெங்கு காய்ச்சலுக்கு பலியான ஒன்றரை வயது குழந்தை

டெங்கு காய்ச்சலுக்கு பலியான ஒன்றரை வயது குழந்தை

by Staff Writer 07-03-2022 | 3:03 PM
Colombo (News 1st) டெங்கு காய்ச்சலினால் யாழ்ப்பாணத்தில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று நேற்று முன்தினம்(05) உயிரிழந்துள்ளது. ஐந்து நாட்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் நேற்று முன்தினம்(05) அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளது. வாகீசன் விதுசன் என்ற ஒரு வயதும் ஐந்து மாதமுமான மீசாலை வடக்கு கொடிகாமத்தைச் சேர்ந்த ஆண்குழந்தையே இவ்வாறு உயிழந்துள்ளது.