கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸிற்கு மன்னார் மக்கள் அஞ்சலி

by Staff Writer 05-03-2022 | 10:41 PM
Colombo (News 1st) மாலைத்தீவில் மரணமடைந்த இலங்கை கால்பந்தாட்ட வீரரான யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் மன்னாரிலுள்ள அன்னாரின் இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய (04) தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பூதவுடல் நேற்றிரவு மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்போது, பெருமளவிலான மக்கள் தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர். அன்னாரின் பூதவுடலுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பெருமளவிலான மோட்டார் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் பொதுமக்கள் அணிவகுத்து சென்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் வரும் வழியில் பூநகரி, முழங்காவில் , தேவன்பிட்டி, விடத்தல் தீவு, ஆண்டாங்குளம், அடம்பன் போன்ற இடங்களை சேர்ந்த கால்பந்தாட்ட கழக வீரர்களும் பொதுமக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை மன்னார் பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ​