by Staff Writer 04-03-2022 | 4:26 PM
Colombo (News 1st) இலங்கையில் கடந்த வருடம் (2021) தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி மூலம் 834 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது.
இதன் ஊடாக ஏற்றுமதி 26% அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் தென்னையுடன் தொடர்புடைய உற்பத்திகளான தேங்காய் உள்ளீடுகள், தென்னை நார் உற்பத்திகள், தென்னை மட்டை உற்பத்திகள் மூலம் 661 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்ததாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில், உள்ளூர் தேங்காய் சார்ந்த பொருட்களுக்கு பாரிய அளவில் கேள்வி நிலவுவதாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார்.