கொழும்பின் சில பகுதிகளில் 14 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 14 மணித்தியால நீர்வெட்டு

by Staff Writer 04-03-2022 | 4:11 PM
Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் நாளை (05) இரவு 08 மணி முதல் நாளை மறுதினம் (06) காலை 10 மணி வரை 14 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம், கொழும்பு 7, 8, 10, 12, 13, 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த காலப்பகுதியில் கொழும்பு 2, 3, மற்றும் 11 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது. அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.