நாட்டிலிருந்து வௌியேறும் உக்ரைனியர்கள்

ஒரு மில்லியன் உக்ரைனியர்கள் நாட்டிலிருந்து வௌியேறினர் - ஐ.நா

by Staff Writer 03-03-2022 | 10:01 AM
Colombo (News 1st) ஒரு மில்லியன் உக்ரைனியர்கள் நாட்டை விட்டு வௌியேறி அயல் நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. கடந்த ஏழு நாட்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உக்ரைனை விட்டு வௌியேறியதை கண்ணுற்றதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் அமைப்பின் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.