மின்சார நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை - ஜனாதிபதி

மின்சார நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை - ஜனாதிபதி

by Staff Writer 02-03-2022 | 12:37 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க கூறியுள்ளார். மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருளை உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இறக்குமதி செய்வதற்கு தேவையாக வசதிகளை திறைசேரி மற்றும் மத்திய வங்கியுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.