மாணிக்கக்கல் அகழ்வு; இருவர் கைது

மாணிக்கக்கல் அகழ்வு; இருவர் கைது

by Staff Writer 02-03-2022 | 2:09 PM
Colombo (News 1st) பொகவந்தலாவையில் அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த தகவலுக்கமைய நேற்று(01) முற்பகல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 38 மற்றும் 43 வயதான பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த இருவரே சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிப்பட்டு இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.