by Staff Writer 02-03-2022 | 4:56 PM
Colombo (News 1st) இலங்கையின் வானொலி துறையின் புதிய மாற்றத்திற்கு வித்திட்ட சிரச FM இன்று 28 ஆவது வருட பூர்த்தியை கொண்டாடுகின்றது.
நாட்டின் தொடர்பாடல் துறையில் புதிய பரிணாமத்தை வழங்கி, 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி சிரச வானொலி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி 24 மணித்தியாலங்களும் ஒலிபரப்பாகும் முதலாவது சிங்கள வானொலி சேவையாக சிரச FM காற்தடம் பதித்தது.
சிறந்த நிகழ்ச்சிகளின் ஊடாக மக்களின் மனங்களை கவர்ந்துள்ள சிரச FM பல விருதுகளுக்கும் பாத்திரமானது.