எல்லேவல நீர்வீழ்ச்சியில் மூழ்கிய அட்டாளைச்சேனை இளைஞர்கள் இருவரின் சடலங்கள் மீட்பு

by Staff Writer 01-03-2022 | 8:49 PM
Colombo (News 1st) வெல்லவாய - எல்லேவல நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்று காணாமற்போன இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அம்பாறை - அட்டாளைச்சேனையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் எல்லேவல நீர்வீழ்ச்சிக்கு நேற்று (28) குளிக்கச்சென்றுள்ளனர். இதன்போது இருவரும் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளனர். இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் இன்று மாலை இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 21 மற்றும் 22 வயதான இரண்டு இளைஞர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.