English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
01 Mar, 2022 | 10:30 am
Colombo (News 1st) கிளிநொச்சி – ஏ9 வீதியின் கரடிப்போக்கு சந்தியை அண்மித்த பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று(28) மீட்கப்பட்டுள்ளது.
கரடிப்போக்கு சந்தியை அண்மித்த பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொதுமக்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் மற்றும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டனர்.
உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு இதன்போது நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த 45 வயதான ஆணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
05 May, 2022 | 06:54 PM
28 Feb, 2022 | 03:13 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS