ஐ.நா கூட்டத்தொடர் இன்று(28) ஆரம்பம்

ஐ.நா கூட்டத்தொடர் இன்று(28) ஆரம்பம்

by Staff Writer 28-02-2022 | 2:53 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று(28) ஆரம்பமாகின்றது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வ​ரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணம் தொடர்பில் எதிர்வரும் 03 ஆம் திகதி கலந்துரையாடப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடருக்கான இலங்கை பிரதிநிதிகள் குழுவுக்கு வௌிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமை தாங்குகின்றார்.