தேயிலை தோட்டத்திலிருந்து சிறுத்தையின் உடல் மீட்பு

ஹட்டனில் தேயிலைத் தோட்டத்திலிருந்து சிறுத்தையின் உடல் மீட்பு

by Staff Writer 26-02-2022 | 4:27 PM
Colombo (News 1st) ஹட்டன் - நோர்டன் பிரிட்ஜ், விமலசுரேந்திரகம பகுதியிலுள்ள தேயிலை தோட்டமொன்றில் இருந்து உயிரிழந்த சிறுத்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. சிறுத்தையின் உடலில் இரண்டு பலத்த காயங்கள் காணப்படுவதுடன், முன் வலது காலிலும் காயம் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சுமார் 6 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்றே உயிரிழந்துள்ளது. இலங்கைக்கே உரித்தான Panthera Pardus இனத்தை சேர்ந்த சிறுத்தை ஒன்றின் உடலே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். உடற்கூற்று பரிசோதனைக்காக சிறுத்தையின் உடல் ரந்தம்பே கால்நடை மருந்துவ நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நோர்டன் பிரிட்ஜ் பொலிஸாரும் நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்களமும் இணைந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.