தெரிவு செய்யப்பட்ட சிவாலயங்களுக்கு நிதியுதவி

பிரதமரின் பணிப்புரைக்கு அமைய சிவாலயங்களுக்கு நிதியுதவி

by Staff Writer 26-02-2022 | 4:19 PM
Colombo (News 1st) சிவராத்திரி விரத புண்ணிய காலத்தில் ஆன்மீக செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு அமைய நிதியுதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரத் தலங்கள் உட்பட, நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சிவாலயங்களுக்கு இதனூடாக நிதியுதவி வழங்கப்படும் என பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இந்த நிதியுதவி வழங்கும் செயற்றிட்டம், தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களின் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது. மகா சிவராத்திரி தினத்தன்று நடத்தப்படும் கலை கலாசார நிகழ்வுகளின் போது, சிறார்களுக்கு பரிசில்கள் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி பெற்றுக்கொடுக்கப்படும் என பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.