English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
26 Feb, 2022 | 3:30 pm
Colombo (News 1st) யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் இருவர் , கடந்த மூன்று நாட்களாக முன்னெடுத்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
இன்று பகல் முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை அவர்கள் கைவிட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கடந்த 23 ஆம் திகதி புதன்கிழமை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை சில பகுதிகளில் இன்றும் முன்னெடுக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் முன்னணி இந்த கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை ஏற்பாடு செய்துள்ளது.
22 Apr, 2022 | 04:10 PM
25 Feb, 2022 | 03:46 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS