Torch விவகாரம்: முறைப்பாடு செய்யவுள்ள சபாநாயகர்

Torch Light விவகாரம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு

by Staff Writer 25-02-2022 | 3:56 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சபைக்கு Torch Light எடுத்துச்சென்றமை தொடர்பில் விசாரணை செய்யுமாறு பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை அறிவித்தார். மின்வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (24) பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். Torch Light-களை ஔிரச்செய்து பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சபைக்கு Torch Light -இனை கொண்டுசென்றமை தொடர்பில் ஆளும் கட்சியினர் எழுப்பிய கேள்வி காரணமாக சபையில் வாதப்பிரதிவாதம் ஏற்பட்டது. இதனால் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருந்தார்.