சர்வதேசத்தின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை

ஏப்ரல் 21 தாக்குதல்: சர்வதேசத்தின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவிப்பு

by Staff Writer 25-02-2022 | 6:06 PM
 Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கவும் நீதியை நிலைநாட்டவும் சர்வதேசத்தின் உதவியை நாடுவதைத் தவிர மாற்று வழியில்லையென இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கமும் சட்ட மா அதிபர் திணைக்களமும் தவறியுள்ளதாக இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது. உண்மையை மறைத்து, அரசியல் இலாபத்திற்காக இந்த தாக்குதலை பயன்படுத்தி, விடயங்களை சிக்கலாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை கண்கூடு எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கவும், நீதியை நிலைநாட்டவும் சர்வதேசத்தின் உதவியை நாடுவதைத் தவிர மாற்று வழியை தாம் காணவில்லையெனவும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்