English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
25 Feb, 2022 | 3:46 pm
Colombo (News 1st) யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் இருவர் ஆரம்பித்த உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கடந்த 23 ஆம் திகதி புதன்கிழமை உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்த கைதிகள் 23 ஆம் திகதி முதல் உணவை புறக்கணித்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இதனிடையே, கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர்களின் உறவினர்களால், வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
13 May, 2022 | 05:08 PM
12 Apr, 2022 | 04:31 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS