தனியார் பஸ்களுக்கு இபோச-விலிருந்து எரிபொருள்

தட்டுப்பாடு ஏற்பட்டால் தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையிடமிருந்து எரிபொருள்

by Staff Writer 24-02-2022 | 8:51 AM
Colombo (News 1st) நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கான திட்டமொன்று வகுக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. நிதி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தியதாக, இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம குறிப்பிட்டார். 2 நாட்களுக்கு மாத்திரம் போதுமான அளவு எரிபொருள் தற்போது இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில்வே திணைக்களத்திடம் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் நேற்று முன்தினம்(22) மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுக்கான எரிபொருள் இதுவரை கிடைக்கவில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். விரைவில் முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் போதுமான அளவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.