கொக்குவில் புகையிரத கடவையில் விபத்து; இளம்பெண் பலி

கொக்குவிலில் ரயிலில் மோதி இளம் பெண் பலி; உடுப்பிட்டி விபத்தில் இளைஞர் பலி

by Staff Writer 24-02-2022 | 5:14 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் ரயிலில் மோதி 24 வயதான இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து காங்கேசன் துறை நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதி குறித்த பெண் உயிரிழந்துள்ளார். சைக்கிளில் புகையிரத கடவையைக் கடக்க முற்பட்டபோதே விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, உடுப்பிட்டியில் வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் லொறியுடன் மோதி விபத்திற்குள்ளானது. மோட்டார் சைக்கிளில் பயணித்த, துன்னாலை, கோவிற்சந்தையை சேர்ந்த 20 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நாளை (25) ஆஜர்படுத்தப்படவுள்ளார். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்