English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
24 Feb, 2022 | 4:25 pm
Colombo (News 1st) யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் இருவர் இரண்டாவது நாளாகவும் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கைதிகள் நேற்று (23) முதல் உணவை புறக்கணித்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நேற்று இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இதேவேளை, கைதிகளின் உறவினர்கள் யாழ். சிறைச்சாலைக்கு சென்று அவர்களை சந்தித்தனர்.
பின்னர் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் இரண்டாவது நாளாகவும் அவர்கள் இணைந்துகொண்டனர்.
மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் எனும் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
16 Jul, 2022 | 05:50 PM
05 Jul, 2022 | 06:47 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS