பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பிணை நீடிப்பு 

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பிணை நீடிப்பு 

by Staff Writer 22-02-2022 | 3:21 PM
Colombo (News 1st) இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பிணை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிணையில் உள்ள பேரறிவாளனின் பிணைக் காலம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், எதிர்வரும் 28 ஆம் திகதி தொடக்கம் மேலும் ஒரு மாதத்திற்கு பேரறிவாளனின் பிணையை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனின் உடல் நிலையை கருத்திற்கொண்டு பிணை வழங்குமாறு, அவரின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்ததற்கு அமைய, கடந்த வருடம் மே மாதம் 28 ஆம் திகதி 30 நாட்களுக்கு பிணை வழங்கப்பட்டது. பேரறிவாளன் வீட்டிலிருந்தே மருத்துவ சிகிச்சைகளை பெறுவதுடன், இடைக்கிடையே தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுவதாக The Hindu செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 30 நாட்கள் பிணை நிறைவடைந்த நிலையில், கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் பிணைக் காலத்தை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.