சட்டவிரோத மணல் அகழ்வு; 06 பேர் கைது

சட்டவிரோத மணல் அகழ்வு; 06 பேர் கைது

by Staff Writer 21-02-2022 | 6:27 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (21) காலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 06 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய 04 டிப்பர்கள் மற்றும் 02 உழவு இயந்திரங்கள் ஆகியன பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு இன்று (21) பிற்பகல் பிணை வழங்கப்பட்டதுடன், அவர்களை நாளைய தினம் (22) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.