by Staff Writer 20-02-2022 | 3:43 PM
Colombo (News 1st) பதுளை - எல்ல நகரிலுள்ள ஹோட்டலொன்றின் மேல் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து வௌிநாட்டுப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.
28 வயதான செக் குடியரசு பிரஜையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தெமோதரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று (20) அதிகாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வௌிநாட்டுப் பிரஜை மேல் மாடியிலிருந்து வழுக்கி கீழே வீழ்ந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.