வௌிநாடு செல்வோருக்கு நான்காவது தடுப்பூசி

வௌிநாடு செல்வோருக்கு நான்காவது தடுப்பூசி

by Staff Writer 18-02-2022 | 3:51 PM
Colombo (News 1st) வௌிநாடு செல்வோருக்கு நான்காவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. Booster தடுப்பூசியாக வழங்கப்படும் பைசர் (Pfizer) தடுப்பூசியே நான்காவது தடுப்பூசியாகவும் வழங்கப்படவுள்ளது. மூன்றாவது தடுப்பூசி பெற்று ஒரு மாதத்தின் பின்னர் நான்காவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார். வௌிநாடு செல்வோருக்கு மாத்திரமே நான்காவது தடுப்பூசி வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, மேலும் 27 கொரோனா மரணங்கள் நேற்று (17) அறிவிக்கப்பட்டன. இந்த மரணங்கள் நேற்று முன்தினம் பதிவானவையென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 17 ஆண்களும் 10 பெண்களும் அடங்குகின்றனர். உயிரிழந்தவர்களில் 19 பேர் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களாவர். இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15,926 ஆக அதிகரித்துள்ளது.