ஜனாதிபதி ஆணைக்குழுவில் ரஞ்சன் ராமநாயக்க இன்றும் ஆஜர்

by Staff Writer 18-02-2022 | 6:58 PM
Colombo (News 1st) நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இரண்டாவது நாளாக இன்றும் (18) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்டார். ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினர் இன்றும் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். நாளைய தினமும் ரஞ்சன் ராமநாயக்க ஆணைக்குழுவிற்கு அழைத்துவரப்படவுள்ளார்.