கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு

by Staff Writer 18-02-2022 | 3:25 PM
 Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் இன்றும் (18) நாளையும் (19) நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 10 மணி தொடக்கம் நாளை இரவு 10 மணி வரை 36 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது. கொழும்பு- 01, 07, 09, 10 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தவிர கொழும்பு 08 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிற்கு நீரை விநியோகிக்கும் பிரதான கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் கோளாறு காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.