நிலாவௌி கடலில் மூழ்கி இளைஞர் பலி

சுற்றுலா சென்ற இளைஞர் நிலாவௌி கடலில் மூழ்கி பலி

by Staff Writer 17-02-2022 | 1:50 PM
Colombo (News 1st) திருகோணமலை - நிலாவெளி கடலில் நீராடச்சென்று காணாமல்போன இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (17) முற்பகல் சடலம் கரையொதுங்கியதாக பொலிஸார் கூறினர். கண்டி - தலாதுஓயா பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே நேற்று (16) பிற்பகல் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தார். மாத்தளையிலிருந்து சுற்றுலா சென்றிருந்த சிலர், நேற்று (16) பிற்பகல் நிலாவெளி கடலில் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் கடல் அலையில் அள்ளுண்டு சென்ற நிலையில், அவரை காப்பாற்ற 2 நண்பர்கள் முயற்சித்துள்ளனர். மூவரும் கடல் அலையில் அள்ளுண்டு சென்றபோது, பொலிஸ் உயிர் காக்கும் பிரிவினரால் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இந்த சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.