மனோரம வீரசிங்கவை CID அழைத்தது ஏன்?

சமூக வலைத்தள செயற்பாட்டாளர் மனோரம வீரசிங்கவை CID அழைத்தது ஏன்?

by Staff Writer 17-02-2022 | 7:33 PM
Colombo (News 1st) சமூக வலைத்தளங்களில் அரசியல், சமூக செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கும் மனோரம வீரசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார். எனினும், அழைக்கப்பட்டதற்கான காரணம் தமக்கு தெரியாது என மனோரம வீரசிங்க குறிப்பிட்டார். இதனால், தாம் அழைக்கப்பட்டதற்கான காரணத்தை கோரி மனோரம வீரசிங்க தமது சட்டத்தரணியூடாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதற்கான காரணத்தை அறிவித்ததன் பின்னர், அதிகாரிகளுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குவதற்கு தாம் தயாராகவுள்ளதாக மனோரம வீரசிங்க குறிப்பிட்டார்.