நாட்டில் மூன்று வகையான காய்ச்சல் பரவுகிறது

நாட்டில் மூன்று வகையான காய்ச்சல் பரவுகிறது: சுகாதார அமைச்சு அறிவிப்பு

by Staff Writer 16-02-2022 | 5:19 PM
Colombo (News 1st) நாட்டில் மூன்று வகையான காய்ச்சல் தற்போது பரவுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனால் காய்ச்சல் ஏற்பட்டு 48 மணித்தியாலத்திற்குள் மருத்துவ சிகிச்சைகளை பெறுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் , விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். COVID, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவும் வீதம் தற்போது அதிகரித்து செல்வதாக அவர் கூறினார். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அது குறித்து ஆராயுமாறும், கவனயீனமாக செயற்பட வேண்டாம் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். காய்ச்சல் ஏனையோருக்கும் பரவும் என்பதால், நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.