by Staff Writer 16-02-2022 | 7:54 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை வழிநடத்திய சஹ்ரான் ஹாஷிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவிடம் நேற்று 05 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பான மெரில் ரஞ்சன் லமாஹேவா உள்ளிட்ட விசாரணைக் குழுவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.