யாழ். போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனைகள் இன்று (16) முதல் மீள ஆரம்பம்

யாழ். போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனைகள் இன்று (16) முதல் மீள ஆரம்பம்

யாழ். போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனைகள் இன்று (16) முதல் மீள ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2022 | 9:36 am

Colombo (News 1st) யாழ். போதனா வைத்தியசாலையில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனைகள் இன்று (16) முதல் மீள ஆரம்பிக்கப்படுகின்றன.

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் நியூஸ்பெஸ்ட்டுக்கு இதனை உறுதிப்படுத்தினார்.

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுகாதார தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கடந்த வியாழக்கிழமை முதல் வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

குறித்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று (16) முதல் யாழ். போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்