இளைஞரை பலி கொண்ட வாகன விபத்து

இளைஞரை பலி கொண்ட வாகன விபத்து

by Staff Writer 16-02-2022 | 10:34 AM
Colombo (News 1st) கண்டி - பலகொல்ல, பல்லேகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலகொல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகல பிரதேசத்தில் நேற்று முன்தினம் (14) இரவு வீதியில் பணிகளை மேற்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாகனம் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த வயது 21 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். வாகனத்தை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.