இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும்: கடற்றொழில் அமைச்சு அறிவிப்பு

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும்: கடற்றொழில் அமைச்சு அறிவிப்பு

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும்: கடற்றொழில் அமைச்சு அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2022 | 6:45 pm

Colombo (News 1st) இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விரைவில் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து ரத்நாயக்க குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கமும் கலந்துரையாடலுக்கான இணக்கத்தை தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ள படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்