9 Mn ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்

9 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்

by Staff Writer 15-02-2022 | 5:24 PM
Colombo (News 1st) 9 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மத்திய தபால் பரிமாற்றகத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, குஷ் எனப்படும் கஞ்சா 472 கிராமும் 302 போதை வில்லைகளும் தனியார் பொதிச் சேவையினூடாக கொண்டுவரப்பட்ட பொதிகளுக்குள் காணப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரித்தானியா, ஜேர்மன், கனடா ஆகிய நாடுகளிலிருந்து கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு குறித்த பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனினும், பொதியில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகள் போலியானவை என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.