கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

வியாழேந்திரன் வீட்டின் முன்பு கொலை: வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு 

by Staff Writer 15-02-2022 | 6:48 PM
Colombo (News 1st) இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான சாட்சியாளர் ஒருவர் இன்று மன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இதன்போது சாட்சியாளருக்கு நீதவான் உத்தரவிட்டார். துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் , தொடர்ந்தும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.