மைத்திரிபாலவின் மனு மீது மார்ச் 9ஆம் திகதி விசாரணை

மைத்திரிபால சிறிசேனவின் மேன்முறையீட்டு மனு மீது மார்ச் 9 ஆம் திகதி விசாரணை

by Staff Writer 15-02-2022 | 8:12 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தருமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் இரத்து செய்து, தன்னை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை மார்ச் 09 திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்தது. சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஃபிரேன்க் குணவர்தன, சமன் வீரமன் ஆகியோர் முன்னிலையில் மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிப்பு கிடைக்கவில்லையென தெரியவந்தமையினாலேயே மனு மீதான விசாரணை பிற்போடப்பட்டது.