பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரி கொழும்பில் கையெழுத்து சேகரிப்பு

by Staff Writer 15-02-2022 | 8:19 PM
Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை கொழும்பில் இன்று (15) நடைபெற்றது. கொழும்பு ​- கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து சேகரிக்கப்பட்டது. சர்வஜன நீதி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த செயற்திட்டத்தில், அரசியல், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.