இந்தியாவில் இருந்து கடனுக்கு பெற்ற 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கையை வந்தடைந்தது

by Staff Writer 15-02-2022 | 7:45 PM
Colombo (News 1st) நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், இந்திய எரிபொருள் நிறுவனத்தினால் கடனுக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல், கொழும்பை இன்று வந்தடைந்தது. கப்பலை வரவேற்க எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சென்றிருந்ததுடன், இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் பிரசன்னமாகியிருந்தார். 60 நாட்களில் மீளச் செலுத்தும் கடன் சலுகையின் அடிப்படையிலேயே IOC நிறுவனத்திடம் இருந்து இந்த டீசல் இலங்கைக்கு கிடைத்துள்ளது.