English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
15 Feb, 2022 | 7:03 pm
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் COVID பெருந்தொற்று தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், யாழ். மாவட்டத்தில் கடந்த 48 மணித்தியாலங்களில் டெங்கு தாக்கத்தினால் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
யாழ். மாவட்டத்தில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆர். கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.
இதற்கமைய, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில யாழ்ப்பாணத்தில் 360 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளன.
கடந்த 48 மணித்தியாலங்களில் 10 வயது சிறுவனும்18 வயது யுவதியும் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளனர்.
யாழ். கொடிகாமத்தை சேர்ந்த 10 வயதான வ.அஜய் கடந்த வாரம் டெங்கு காய்ச்சலினால் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ். மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி பயின்ற சிறுவனே டெங்குத் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.
அஜயின் இறுதிக்கிரியைகள் கொடிகாமம் பொது மயானத்தில் நேற்று (14) மாலை இடம்பெற்றன.
17 Jul, 2022 | 02:22 PM
05 Jul, 2022 | 07:31 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS