by Staff Writer 13-02-2022 | 2:52 PM
Colombo (News 1st) ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ். தீவகம் அல்லைப்பிட்டியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்ய்பட்டுள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கஞ்சாவை விற்பனை செய்ய முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
42 வயதுடைய குறித்த சந்தேகநபர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 70 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.