கப்பல் துறையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

கப்பல் துறையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

by Staff Writer 13-02-2022 | 3:10 PM
Colombo (News 1st) திருகோணமலை - கப்பல் துறை பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய் - சூரியபுர விசேட பொலிஸ் அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நேற்றிரவு (12) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 1 கிலோ 600 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. திருகோணமலை - கப்பல் துறை பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.