சுப்பர் ஓவரில் வெற்றியை பதிவு செய்த ஆஸி. அணி

இலங்கைக்கு எதிரான 20 க்கு 20 போட்டியில் வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலிய அணி

by Staff Writer 13-02-2022 | 7:42 PM
Colombo (News 1st) இலங்கை அணியுடனான இரண்டாவது 20 க்கு 20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி சுப்பர் ஓவரில் (Super Over) வெற்றியை பதிவு செய்தது. 165 ஓட்டங்கள் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியும் 20 ஓவர்கள் நிறைவில் 164 ஒட்டங்களையே பெற்றதை அடுத்து போட்டி சமநிலையை அடைந்தது. இதனை தொடர்ந்து வெற்றியை கணிப்பதற்கு Super Over வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 5 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 3 பந்துகளிலேயே வெற்றியை தனதாக்கிக் கொண்டது.