COVID நோயாளர்களின் எண்ணிக்கை 35 வீதத்தால் அதிகரிப்பு

by Staff Writer 10-02-2022 | 7:16 PM
Colombo (News 1st) கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் COVID நோயாளர்களின் எண்ணிக்கை 35 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. COVID மரணங்கள் 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாக COVID பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார். பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் கடந்த 5 நாட்களாக நாட்டில் பதிவான COVID மரணங்களின் எண்ணிக்கை 148 ஆகும். குறித்த காலப்பகுதியில் 6,432 COVID நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நாட்டில் 42 வீதமானவர்கள் இதுவரை Booster தடுப்பூசியை பெற்றுள்ளனர். COVID ஒழிப்பை விரைவுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் கண்டி தலதா மாளிகை வளாகத்தில் தடுப்பூசி மத்திய நிலையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் தலையீட்டில் இது முன்னெடுக்கப்படுவதோடு, அட்டையை முன்வைத்தோ அல்லது தேசிய அடையாள அட்டையை வழங்கியோ தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும். எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இங்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.