சைக்கிளில் சென்ற பெண் லொறியுடன் மோதி பலி

சைக்கிளில் சென்ற பெண் லொறியுடன் மோதி பலி

by Staff Writer 10-02-2022 | 11:38 AM
Colombo (News 1st) புத்தளம் - கீரியங்கள்ளி - ஆண்டிகம பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் - அங்குனவில் - அக்கரவெளி பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான 53 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். நேற்று (09) பகல் 2 மணியளவில் இந்த விபத்து விபத்து இடம்பெற்றுள்ளது. கீரியங்கள்ளி பகுதியில் இருந்து ஆண்டிகம பகுதியை நோக்கி பயணித்த துவிச்சக்கரவண்டி - லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பிலான மேலதிக தகவல்களை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.